Wednesday, June 22, 2016

ரகுராம் ராஜன்

யார் இந்த ரகுராம் ராஜன்?

ஏன் அவர் பதவியை நீட்டிக்காதது பெரிதாகப் பேசப்படுகின்றது ? தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட பொருளாதார வல்லுனரான ராஜன் 2008 உலகப் பொருளாதாரச் சரிவை மிகச் சரியாகக் கணித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
அது மட்டும் இல்லாமல் உலகப் பொருளாதார இயக்கமான IMF இல் மிகக்குறைந்த வயதில் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பணியாற்றிய பெருமை உடையவர்.
2013 இல் உலகத்தின் பல நிறுவனங்கள் கோடிக் கணக்கில் சம்பளம் கொடுக்கத் தயாராக இருந்த போதும் அதை விட்டு விட்டு இந்தியப் பொருளாதரத்தை நிர்ணயிக்கும் முக்கியமான RBI governor பதவியை ஏற்றுக்கொண்டார்.

அவர் செய்த முக்கியமான பணிகள்

அவர் பதவி ஏற்ற பொழுது நம் பொருட்களின் விலைவாசியைக் குறிக்கும் பணவீக்கம் 11 சதவிதத்துக்கு மேல் இருந்தது அதைப் பாதிக்கு மேல் குறைத்து உள்ளார்.

இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை 25 லட்சம் கோடி          (3.6 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவுக்கு உயர்த்தி உள்ளார்.

இந்திய வங்கித் துறையில் வராக் கடன்கள் மிகவும் அதிகமாக உள்ளதை சரி செய்யும் துணிச்சலான நடவடிக்கைகளில் இறங்கினார் (Banks asset review).

இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறந்த ஒரு நிபுணரின் கையில் உள்ளது என்று உலக நிதி நிறுவனங்கள் முதலீடு செய்யும் சூழலை உருவாக்கினார்

இது எல்லாற்றுக்கும் சிகரம் வைத்தது போல 2016 ம் ஆண்டின் உலக முக்கியத்துவம் வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக Time நாளிதழால் தேர்வு செய்யப்பட்டார்

இவர் இப்போது பதவியை நீட்டிப்பு செய்ய விரும்பவில்லை என்று சொல்ல முக்கியமான காரணங்கள்
 .
  • துணிச்சலாகத் தனது முடிவுகளை எடுக்கக் கூடிய ராஜனின் செயல்கள் இந்தியாவில் உள்ள பல முறைகேடாகக் கடன் பெற்ற தொழிலதிபர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

  • அவர் கொடுத்த அழுத்தம் காரணமாக வங்கிகள் மூலமாகக் கொடுக்கப்பட்ட வராக் கடன்களை வசூல் செய்யக் கிளம்பின வங்கிகள்.

  • இதனால்தான் விஜய் மல்லயா,அணில் அம்பானி போன்ற முறையில்லாமல் கடன் வைத்துள்ள முதலாளிகளுக்கு நெருக்கடி உருவானது.

விளைவு??????

விஜய் மல்லயா நாட்டை விட்டு ஓடினார்.

அம்பானி போன்றோர் தங்கள் சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இதனால்........கள் அரசியல்வாதிகள் மூலமாக ராஜனுக்கு நெருக்

இவர்கள் அரசியல்வாதிகள் மூலமாக ராஜனுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.

அரசாங்கம் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்காத ராஜனின் செயல்பாடுகள் அரசியல்வாதிகளை பயம்கொள்ளச் செய்தது. மோடியின் "Make in India" வில் உள்ள குறைகள் போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டியது மற்றும் தொழில் அதிபர்கள் எளிதாகக் கடன் பெற வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கச் சொல்லிய போது அவ்வாறு செய்வது விலை வாசியை உயர்த்தும் மற்றும் ஏழை, நடுத்தரவர்க்கத்தைப் பாதிக்கும் என்று அவர் மறுத்தது அரசியல்வாதிகளை கோபம் ஏற்றத் தொடங்கியது .

இவரால் பாதிக்கப்பட்ட பெரும் பண முதலைகள், சுப்ரமணியன் சுவாமி மூலமாகக் காய் நகர்த்தத் தொடங்கினர். சுவாமி, ராஜன் ஒரு தேசத்துரோகி என வெளிப்படையாக பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

இதன் தொடர்ச்சியாக மனம் வெறுத்த ராஜன், தான் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு தான் விரும்பும் பேராசிரியர் பணிக்குத் திரும்பச் செல்வதாக அறிவித்து உள்ளார்.

இவரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து.......................................................... 

பங்குச்சந்தைகள் அதிர்ந்தன!! 

ரூபாய் மதிப்பு சரிந்தது!!

ராஜன் போன்ற திறமைசாலிகள் இந்தியாவை விட்டு வெளியேறுவது இந்தியாவுக்குப் பெரும் இழப்பு என்று அமர்த்தியா சென் போன்ற பல பொருளாதார மேதைகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

வரும் காலங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

எது எப்படியோ! இந்திய பண முதலைகள் மற்றும் சுப்பிரமணிய சுவாமி போன்ற அரசியல் தரகர்களுக்கு இந்தச் செய்தி பெரும் மகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது.


இது தான் நம் தேசத்தின் அவல நிலை!!!!