Sigma
Monday, September 30, 2019
Monday, July 24, 2017
நிலக்கடலை
நிலக்கடலை, கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில்
அழைக்கப்படுகிறது.
இது, பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து
நிறைந்தது.
‘ஏழைகளின் பாதாம்’’ என்று நிலக்கடலையை குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது. நிலக்கடலையை வேகவைத்தோ, வறுத்தோ உண்ணும் வழக்கம் உள்ளது.
கடலை எண்ணெய் என்ற பெயரில் சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்துகிறோம். நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சிறந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸ்.
இந்தியாவில், மலிவான விலையில் கிடைக்கும் இதன் மகிமை தெரியாமல் அலட்சியப்படுத்தி வருகிறோம்.
நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று.
‘ஏழைகளின் பாதாம்’’ என்று நிலக்கடலையை குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது. நிலக்கடலையை வேகவைத்தோ, வறுத்தோ உண்ணும் வழக்கம் உள்ளது.
கடலை எண்ணெய் என்ற பெயரில் சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்துகிறோம். நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சிறந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸ்.
இந்தியாவில், மலிவான விலையில் கிடைக்கும் இதன் மகிமை தெரியாமல் அலட்சியப்படுத்தி வருகிறோம்.
நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று.
உடலின்
வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கிறது.
குறிப்பாக,
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த எனர்ஜி தரும் உணவு.
நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில் அதிகம் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரச்சத்து நமது உடலில் எல்.டி.எல். (Low-density lipoprotein) எனப்படும் கெட்ட கொழுப்பை குறைத்து, நன்மை செய்யும் எச்.டி.எல். (High-density lipoprotein - HDL) கொழுப்பை அதிகப்படுத்துகிறது.
நிலக்கடலையில் டிரைப்டோபீன் (Tryptophen) என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது, மூளை நரம்புகளை தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால், மனஅழுத்தம் குறைகிறது.
இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.
நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், இதய நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட் (Monounsaturated fats), ஒலீக் அமிலம் (Oleic Acid) போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது.
குறைந்தபட்சம் வாரத்தில் 4 நாள் நிலக்கடலையை சாப்பிட்டு வருவது இதய நோயை தடுக்க உதவும். இறைச்சி உணவை விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலையை சாப்பிடலாம். இதிலுள்ள சத்துகள் முதுமையை தள்ளிப்போடுவதுடன், இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.
நிலக்கடலையில் உள்ள சத்து ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. குறிப்பாக, நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகளவு உள்ளது.
ஆகவே, பெண்கள் தினமும் 400 கிராம் என்ற அளவில் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.
இதனால், பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் மார்பக கட்டி ஏற்படாமல் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிலக்கடலையில் நிறைந்துள்ளன.
இதன் காரணமாக பெண்களுக்கு கர்ப்பப்பை கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாகுவதை தடுக்க முடியும்.
20 ஆண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
எனவே, நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.
குறிப்பாக, பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.
நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில் அதிகம் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரச்சத்து நமது உடலில் எல்.டி.எல். (Low-density lipoprotein) எனப்படும் கெட்ட கொழுப்பை குறைத்து, நன்மை செய்யும் எச்.டி.எல். (High-density lipoprotein - HDL) கொழுப்பை அதிகப்படுத்துகிறது.
நிலக்கடலையில் டிரைப்டோபீன் (Tryptophen) என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது, மூளை நரம்புகளை தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால், மனஅழுத்தம் குறைகிறது.
இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.
நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், இதய நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட் (Monounsaturated fats), ஒலீக் அமிலம் (Oleic Acid) போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது.
குறைந்தபட்சம் வாரத்தில் 4 நாள் நிலக்கடலையை சாப்பிட்டு வருவது இதய நோயை தடுக்க உதவும். இறைச்சி உணவை விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலையை சாப்பிடலாம். இதிலுள்ள சத்துகள் முதுமையை தள்ளிப்போடுவதுடன், இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.
நிலக்கடலையில் உள்ள சத்து ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. குறிப்பாக, நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகளவு உள்ளது.
ஆகவே, பெண்கள் தினமும் 400 கிராம் என்ற அளவில் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.
இதனால், பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் மார்பக கட்டி ஏற்படாமல் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிலக்கடலையில் நிறைந்துள்ளன.
இதன் காரணமாக பெண்களுக்கு கர்ப்பப்பை கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாகுவதை தடுக்க முடியும்.
20 ஆண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
எனவே, நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.
குறிப்பாக, பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.
நன்றி: சுரன் சுகுமாரன்-இணையதளம்
யூதர்கள்
ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக
இருக்கிறார்கள்?
தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம்
என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்
என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக
வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின்
கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக
உடைகள், உணவுப்
பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று
பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.
நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப்
பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக
இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது.
ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும்
இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த
திறன் தற்செயலாக வந்ததா? அல்லது
ஒரு தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய வடிவில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே, அதுபோல இந்த திறமையை மனித முயற்சியால் சிருஷ்டி
பண்ணிக் கொள்ள முடியுமா? இந்தக்
கேள்விகள் எனது 2 ஆம்
ஆண்டில் அதாவது 1980 டிசம்பரில்
நான் கலிபோர்னியா திரும்ப வர இருந்தபோது என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன.
எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள்
உட்கொள்ளும் உணவு, கலாச்சாரம், மதம், கர்ப்பிணி
தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல்
துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள்
பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தேன்.
தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை
ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார்
செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும்
இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி
செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள். சில
சமயம் நான் அவளுக்கு கணக்குப் போட உதவி செய்வேன். அப்போது அவளிடம், “இதெல்லாம் உன் குழந்தைக்காகவா?” என்று கேட்பேன். “ஆமாம், கருவிலிருக்கும் போதே பயிற்சி கொடுத்தால்
பிற்காலத்தில் மேதையாக ஆகும், இல்லையா?” என்பாள். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை
விடுவித்துக் கொண்டே இருப்பாள்.
கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது:
பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும்,
பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை
துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற
கொட்டை வகைளும் (nuts) சேர்த்த
பச்சைக் காய்கறிக் கலவை (salads) ஆகியவற்றை
உண்ணுகிறாள்.
மீன் குழந்தையின் மூளை
வளர்ச்சிக்கு நல்லது என்று நம்புகிறார்கள்; ஆனால்
மீனின் தலை மூளைக்கு நல்லதில்லையாம்
கர்ப்பிணி பெண் மீன் எண்ணெய் உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம்.
மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத பகுதிகளையும் மட்டுமே
சாப்பிடுகிறார்கள்; இறைச்சி
சாப்பிடுவதில்லை. இறைச்சி மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த
விதத்திலும் பயனளிக்காது என்று நம்புகிறார்கள்..
உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள்
சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம்
போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால்
பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.
புகை பிடிப்பவர்களின்
கவனத்திற்கு!
சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின்
நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும்
DNA வையும்
பாதிக்கும்; இதன்
காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும்
உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.
இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? உலகின் மிகப் பெரிய சிகரெட் தயாரிப்பாளர்……..யார் என்று உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள்
உண்ணும் உணவில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே
குழந்தைகளின் உணவும் அமைகிறது.
முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின்
மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்ளுகிரார்கள்.
என் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு
யூதக் குழந்தையும் 3 மொழிகள்
– ஹீப்ரூ, அரபிக் மற்றும் ஆங்கிலம் – அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள் இசைக்கத்
தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு கட்டாயம்
இசைக்கருவி வாசிக்கும் பழக்கம்
குழந்தைகளின் IQ (intelligence quotient) வை
அதிகரித்து, அவர்களை
மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை
அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.
முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள் வணிகக் கணிதவியலை படிக்கிறார்கள்.
விஞ்ஞானப் பாடம் முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா குழந்தைகளையும் யூதக்
குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிபோர்னியா குழந்தைகள் 6 வருடம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்..
யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம் சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு
விளையாட்டுக்களும் மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.
உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள்
விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைகிறார்கள்.
போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம்
ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக
பொருட்கள் செய்வது (product creation) என்று
பல்வேறு முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத்
திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப
கழகங்களிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.
வணிகம் சொல்லித்தரும்
ஆசிரியருக்கு முன்னுரிமை
கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் கடைசி வருடம் ஒரு செயல் முறை
திட்டத்தை நடைமுறைப் படுத்தி காட்ட வேண்டும்;
10 பேர்கள் அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த
செயல்முறை திட்டத்தில் 10 மில்லியன்
யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால் தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.
இந்தக் காரணத்தினாலேயே உலக
வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது உலகப் புகழ்பெற்ற
லீவாய்ஸ் (Levis) பொருட்கள்
இஸ்ரேல் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business and fashion) ஆசிரியர்களால்
உருவாக்கப்பட்டதாகும்.
யூதர்கள் பிரார்த்தனை
செய்யும்போது கவனித்து இருக்கிறீர்களா? எப்போதும்
தலையை அசைத்து அசைத்துப் பிரார்த்தனை செய்வார்கள். இப்படிச் செய்வதால் மூளை
தூண்டிவிடப்பட்டு மூளைக்கு
அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாம்.
இவர்களைப் போலவே ஜப்பானியர்களும்
சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள். சுஷி உணவை (புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் உணவு) விரும்பி உண்பார்கள்.
இந்த இரண்டு இனங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதை தற்செயல்
என்று சொல்லலாமா?
நியுயார்க்கில் அமைந்திருக்கும்
யூதர்களின் வர்த்தக நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது. யாருக்காவது
பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால் வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம் தழைக்க எல்லா வகையிலும்
உதவுகிறது. இதனாலேயே ஸ்டார்பக்ஸ், டெல்
கம்ப்யூட்டர்ஸ்,கோகோகோலா, DKNY, ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின்
டோனட், ஹாலிவுட்
படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது ஆதரவில் நடை
பெறுகின்றன.
யூத மருத்துவ பட்டதாரிகள்
நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனத்தின் வட்டியில்லாக்
கடனைப் பெற்று தனியாக டாக்டர் தொழில் நடத்தலாம். இதனால் நியுயார்க், கலிபோர்னியா நகரங்களில் மருத்துவ மனைகளில் போதுமான
டாக்டர்கள் இருப்பதில்லை.
2005 இல்
சிங்கப்பூர் போயிருந்த போது ஓரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இங்கு சிகரெட்
பிடிப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். இஸ்ரேல்
நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம் என்று கருதப்படுகிறது. ஒரு
சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ்.
டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவேதான். சிங்கப்பூர்
மிகச்சிறிய நாடு; மன்ஹாட்டன்
அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன.
இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு
பாக்கெட் சிகரெட்டின் விலை வெறும் 0.70
யு.எஸ். டாலர்தான். எங்கு பார்த்தாலும் மக்கள்
சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். பலன்? லட்சக்கணக்கான
மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்!
அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை
சிரமப் படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட்
பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.
சற்று சிந்தித்துப் பாருங்கள்.
என்னுடைய ஆய்வறிக்கையில் நான் இனத்தையோ, மதத்தையோ
குறிப்பிடவில்லை.
நம்மால் யூதர்களைப் போன்ற
புத்திசாலி தலைமுறையை உருவாக்க முடியுமா?
(written by Dr. Stephen Carr Leon) –
Translated by Ranjani Narayanan
நன்றி:
நெருடல்-இணையதளம்
Tuesday, March 14, 2017
ஆஸ்டின்பட்டி ஆஸ்பத்திரி
விகடனில் வந்த ஒரு கட்டுரை:
மதுரை டு விருதுநகர் பைபாஸ் சாலையில் நின்று, “தோப்பூர் அரசு
தொற்றுநோய் ஆஸ்பத்திரி எங்கே இருக்கிறது?” என்று கேட்டால், “எது… அந்தக் காட்டு
ஆஸ்பத்திரியா?” என்று கேட்டுவிட்டுத்தான் வழிகாட்டுகிறார்கள்.
பிரதான சாலையில் இருந்து பிரியும் ஒரு பாதையின் இறுதியில் கனத்த
இரும்பு கேட்டுடன்கூடிய கட்டடங்கள் தொடங்குகின்றன. முகப்பில் `பழ
விருட்சங்கள்’ என எழுதப்பட்டுள்ள பகுதிகளில் மா, பலா, கொய்யா மரங்கள்
நிறைந்திருக்கின்றன. அதன் அருகிலேயே அந்த மரத்தை நட்ட நோயாளியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.
அவற்றைக் கடந்து நடந்தால், பெரிய
கார்ப்பரேட் மருத்துவமனைக்குள் நுழையும் உணர்வு ஏற்படுகிறது. விதவிதமான செடி
கொடிகள், நேர்த்தியாகப் பராமரிக்கப்படும் பூந்தோட்டம் சூழ
அமைந்திருக்கிறது
மருத்துவமனை வளாகம். ஆர்.ஓ வாட்டர் ப்ளான்ட், காய்கறித் தோட்டம், அழகுற வண்ணம்
தீட்டப்பட்ட நடைபாதைகள், நோயாளிகளுடன் வந்தவர்கள் அமர்ந்து இளைப்பாற சுத்தமான
திறந்தவெளிக் கட்டடங்கள், பறவைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட சிறு குளங்கள்… என, திரும்பும் பக்கமெல்லாம் ஆச்சர்யங்கள்.
திறந்தவெளிக் கட்டடங்கள், பறவைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட சிறு குளங்கள்… என, திரும்பும் பக்கமெல்லாம் ஆச்சர்யங்கள்.
வார்டுகளில் அவ்வளவு தூய்மை. உள்ளே டிவி ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், மெல்லியச்
சத்தத்தில் வானொலி ஒலித்துக்கொண்டிகிறது. ஒரு வார்டின் முகப்பில், சற்று
குணமடைந்த நோயாளிகள் தையல் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
வேறொரு பக்கம், நோயாளிகளுக்கு
முடி திருத்தும் சலூன் இயங்கிக்கொண்டிருக்கிறது.
தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில்தான் இருக்கிறோம் என்ற உணர்வே
எழவில்லை. நோயாளிகளும் அப்படியான மனநிலையில்தான் இருக்கிறார்கள்.
“எப்படி இது சாத்தியம்?” என்று எவரைக்
கேட்டாலும், அந்த ஒற்றை மனிதரை நோக்கித்தான் கை நீட்டுகிறார்கள். அவர்தான்
மருத்துவர் காந்திமதிநாதன். தோப்பூர் மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவ அதிகாரி
(ஆர்.எம்.ஓ).
“நான் எதையும் மாத்திடலை சார். எல்லாருமே அவங்கவங்க வேலையை ஒழுங்கா செய்றோம். அவ்வளவுதான்” என, தன்னடக்கத்துடன்
பேசுகிறார் டாக்டர் காந்திமதிநாதன்.
காசநோய், காலரா, அம்மை போன்ற
நோய்கள், வெகு எளிதில் மற்றவர்களுக்குத் தொற்றக்கூடியவை. இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை
அளிப்பதற்காக, மதுரையில் இருந்து 18 கி.மீ தொலைவில்
தோப்பூர்-ஆஸ்டின்பட்டி என்ற இடத்தில் 1960-ம் ஆண்டு
அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது இந்த மருத்துவமனை. 207 காச
நோயாளிகளும், 28 காலரா நோயாளிகளும், 50 அம்மை
நோயாளிகளும் தங்கும் வசதிகொண்ட இந்த மருத்துவமனை, தென்தமிழக
மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது.
சுமார் 325 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, மருத்துவக்
கல்வி இயக்குநரகத்தின்
கீழ் செயல்படும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவாகச்
செயல்படுகிறது. தொற்றுநோயாளிகளுக்கான
மருத்துவமனை என்பதாலும், நகரைவிட்டுத் தொலைவில் இருப்பதாலும்
மருத்துவர்களும் சரி, ஊழியர்களும் சரி இங்கே பணிபுரிய தொடக்கத்தில்
இருந்தே விரும்புவதில்லை.
`தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திடுவேன்’ என்பதுபோல அரசு மருத்துவர்களுக்கான தண்டனைக் களமாக மாற்றப்பட்ட
இடம்தான் இந்தத் தோப்பூர் அரசு மருத்துவமனை. அக்கறையின்மையும் பராமரிப்பின்மையும்
மருத்துவமனையின் பெயரைக் குலைத்துவிட்டன.
பல லட்சம் மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கவேண்டிய இந்த மருத்துவமனை, தேய்ந்துபோன
நிலையில்தான் இந்த மருத்துவமனையின்
மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார் காந்திமதிநாதன்.
“உண்மையில், நான் விரும்பி
இந்த மருத்துவ மனைக்கு வரலை. பணிமாறுதல் கோரியபோது, எனக்கு இருந்த
ஒரே ஆப்ஷன் இந்த மருத்துவ மனைதான். அதுக்கு முன்னால் நான் இந்த மருத்துவமனையைப்
பார்த்ததுகூட இல்லை. இப்படியொரு நிலையில் இருக்கும்னு எனக்குத் தெரியாது. முதல்
நாள் இங்கே வந்து பார்த்தப்பவே, நாம தவறான
முடிவை எடுத்துட்டோம்னு தெரிஞ்சுபோச்சு.
பஸ் வசதிகூட இல்லை. ரெண்டு கிலோமீட்டர் நடந்துதான் வரணும். உடனடியா, மேலதிகாரிகள்கிட்ட
`எனக்கு வேறு மருத்துவமனைக்கு டெபுடேஷன் போட்டுத்
தாங்க சார்’ன்னு கேட்டேன். எல்லா இடங்கள்லயும் புதர்கள். கால்
வைக்கவே பயமா இருக்கும். திடீர்னு பாம்புகள் ஓடும். இரவு நேரத்தில் சொல்லவே
வேணாம்.
காலரா, காசநோய் பற்றி எல்லாம் பொது மக்களுக்கு போதிய விழிப்புஉணர்வு இல்லை. அதனால் முற்றிய நிலையில்தான் நோயாளிகளை அழைச்சுட்டு வருவாங்க. கூட இருந்தால் தொற்றிக்கொள்ளும் என்பதால், கேட்டுக்குள்ள
நோயாளியை அனுப்பிட்டு
சொந்தக்காரர்கள் கிளம்பிடுவாங்க. நோயாளிகளுக்கு விழிப்புஉணர்வு இல்லாததால், கீழே கால்
வைக்கவே சங்கடமா இருக்கும்.
என்ன செய்றது, எதை மாத்துறதுன்னு எதுவுமே புரியலை.
ஒருநாள், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியிலிருந்து
என்.எஸ்.எஸ் முகாம் நடத்துறதுக்காக 150 மாணவர்கள்
வந்தாங்க. `நாங்க என்ன செய்யணும்’ன்னு கேட்டப்போ, `இந்தப்
புதர்களைப் பார்க்கும்போதே பயமா இருக்கு. முடிஞ்சா, இதை அகற்றுங்க’ன்னு சொன்னேன்.
மறுநாள், நான் மருத்துவமனைக்கு வந்து பார்த்தப்போ, அத்தனைப்
புதர்களையும் அகற்றியிருந்தாங்க. மனசாட்சி, சுருக்குன்னு
குத்துச்சு.
`யார் பெத்த பிள்ளைகளோ… எந்த எதிர்பார்ப்பும்
இல்லாம இவ்வளவு ஆர்வத்தோடு இந்த வேலையைச் செஞ்சிருக்காங்க.
ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்
சம்பளம் வாங்குற நாம, அதற்கான வேலையைச் செய்ய வேண்டாமா’ன்னு உறுத்தல்.
அந்த உறுத்தலோடு வீட்டுக்குப் போனேன். வழியில் ஜஸ்டின்னு ஒரு நண்பரைச் சந்திச்சேன். நியூராலஜிஸ்ட்டா
இருக்கார். என் கையைப் பிடிச்சுக்கிட்டு, `மிகச் சரியான
ஒரு இடத்தைத் தேர்வு செஞ்சிருக்கீங்க.
எங்க அம்மாவுக்கு 25 வயசுல காசநோய்
வந்தது. தோப்பூர் மருத்துவமனையில்தான்
வெச்சுக் குணப்படுத்தினோம். அந்த மருத்துவமனையை நல்ல நிலைமைக்குக் கொண்டுவரணும்.
நான் என்ன உதவி வேணும்னாலும் செய்றேன்’னு சொல்லி கண்
கலங்கிட்டார். அந்தக் கணமே முடிவுபண்ணிட்டேன், இனி வாழ்நாள் முழுவதும் இந்த மருத்துவமனையில்தான் இருக்கணும்னு.
கலங்கிட்டார். அந்தக் கணமே முடிவுபண்ணிட்டேன், இனி வாழ்நாள் முழுவதும் இந்த மருத்துவமனையில்தான் இருக்கணும்னு.
நல்ல மருத்துவர்கள், அர்ப்பணிப்புள்ள
செவிலியர்கள், எதற்கும் தயங்காத ஊழியர்கள்னு ஏகப்பட்ட வளம் இங்கே இருந்தது.
அதை உரியமுறையில் பயன்படுத்தணும்னு நினைச்சேன். எல்லோரையும் கூப்பிட்டுப்
பேசினேன். என்னைவிடவும் எல்லோரும் ஆர்வமா இருந்தாங்க. வேலைகளை மெள்ள ஆரம்பிச்சோம்.
இந்த மாற்றத்துல எல்லோருடைய வியர்வையும் உறைஞ்சிருக்கு. எங்களை சுதந்திரமா செயல்படவிட்ட அதிகாரிகளுக்கும் இதில் பங்கு இருக்கு” என்கிறார்
காந்திமதிநாதன்.
இப்போது 140 நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகிறார்கள். இறப்புவிகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டது. 6 மருத்துவர்கள், 26 செவிலியர்கள், 30 ஊழியர்கள்
பணிபுரிகிறார்கள். இதுதவிர, ஒப்பந்த ஊழியர்கள் 81 பேர் உள்ளனர்.
இந்த மருத்துவமனையின் முகம் மாறியதில், ஒப்பந்த
ஊழியர்களின் பங்கு முக்கியமானது.
“ஒரே எண்ண ஓட்டத்தில் எல்லோரையும் இணைச்சதுதான் காந்திமதிநாதன் சார் செய்த முதல் வேலை. எல்லோரும்
எல்லா வேலைகளையும்
செய்வோம். ஸ்ட்ரெச்சர் தள்ள ஆள் இல்லைன்னா, நர்ஸே
தள்ளிட்டு வருவாங்க. மருத்துவமனைக்குள்ள குப்பையை யார் பார்த்தாலும் உடனே எடுத்து
அதுக்கான தொட்டியில் போடுவோம். சுய பொறுப்புணர்வு, இந்த
மருத்துவமனையை மட்டும் இல்லை… எங்க வாழ்க்கை
முறையையும் மாத்தியிருக்கு.
சுற்றுப்புறச்சூழலை மாத்தினதோடு நோய் பாதிக்கப்பட்டவங்களோட
மனநிலையை மாத்தவும் முயற்சிசெஞ்சோம். ரொம்பவும் விரக்தியா இருப்பாங்க.
தேற்றவே முடியாது. அவங்களை உற்சாகப்படுத்துற மாதிரி ஏதாவது செய்யணும்னு முடிவுசெஞ்சோம். சாரோட
நண்பர் ஒருத்தர் பத்து எஃப்.எம் ரேடியோ, ஸ்பீக்கர், சென்ட்ரல்
மானிட்டர் செட்டோடு வாங்கித் தந்தார். அதை வார்டுகள்ல வெச்சோம். நல்ல மாற்றம்
தெரிஞ்சது. அதன் பிறகுதான் டி.வி வாங்கினோம். அது மருத்துவமனையின் இறுக்கத்தை
மொத்தமா மாத்திடுச்சு. வீடு மாதிரி எல்லோரும் நினைக்க ஆரம்பிச்சாங்க. சில
நாள்கள்லயே ஒரு நூலகத்தை உருவாக்கிட்டார் காந்திமதிநாதன் சார்.
நிறைய நண்பர்கள், அவங்க கலெக்ஷன்ல
இருந்த புத்தகங்களை எல்லாம் கொடுத்தாங்க. இப்போ 6,000 நூல்கள் இங்கே
இருக்கு” எனப் பெருமிதம் பொங்கப் பேசுகிறார் மருத்துவமனையின்
கண்காணிப்பாளர் டாக்டர் பிரபாகரன்.
நூலகத்துக்கு எதிரே இருக்கிறது, நோயாளிகளுக்கான
விளையாட்டு அறை. கேரம் போர்டு, செஸ் என, பல
உள்விளையாட்டுப் பொருள்கள் இருக்கின்றன. பெண் நோயாளிகள், தங்கள்
இடத்துக்கே பொருள்களை எடுத்துச்
சென்று தாயம், பல்லாங்குழி, ஆடு புலி
ஆட்டம்
விளையாடுகிறார்கள். டென்னிஸ், பேட்மின்டன் கோர்ட்டுகளும் இருக்கின்றன.
விளையாடுகிறார்கள். டென்னிஸ், பேட்மின்டன் கோர்ட்டுகளும் இருக்கின்றன.
“எங்க டீன் எங்களோட முயற்சிகளுக்கு உத்வேகமா
இருக்கார். தீவிர சிகிச்சைப் பிரிவு கேட்டோம். உடனே தந்தார். ஆக்ஸிஜன் சிலிண்டர்
கேட்டப்போ, ஒரே நேரத்துல 24 பேருக்கு
ஆக்ஸிஜன் செலுத்தும் சென்ட்ரல் சிலிண்டர் அமைச்சுத் தந்தார்.
“நம்மைச் சுற்றி நிறைய நல்ல மனிதர்கள் இருக்காங்க.
இங்கே நடந்த ஒவ்வொரு மாற்றத்திலும் அந்த மாதிரி மனிதர்களோட பங்களிப்பு
நிறைஞ்சிருக்கு. இங்கு நடந்துள்ள பெரும்பாலான பணிகள் நல்ல மனிதர்களோட உதவியால்தான்
நடந்திருக்கு. கேன்சரால் பாதிக்கப்பட்டு, அந்த நோயை
வென்று மீண்ட ஒருத்தர் இங்கே வந்து, இவங்க
எல்லாருக்கும் கவுன்சலிங் கொடுக்கிறார். நிறையப் பேரோட உதவியும் உழைப்பும்
இதுக்குள்ள மறைஞ்சிருக்கு. இன்னும் நிறைய செய்யவேண்டியிருக்கு. மூலிகைத் தோட்டம் ஒண்ணு
வெக்கணும்.
நோயாளிகளுக்கு தொழிற்பயிற்சிகளை விரிவுபடுத்தணும்…” காந்திமதிநாதனின்
கனவுகள் விரிகின்றன.
பேருந்தையே கண்டிராத இந்தச் சாலைகளில் இப்போது தினமும் ஏழு முறை
பேருந்துகள் வந்து போகின்றன. சிகிச்சை முடிந்து செல்லும் நோயாளிகள், செவிலியர்களையும்
மருத்துவமனையையும் பிரிய மனமில்லாமல் செல்லும் அதிசயம் இங்கே நிகழ்கிறது.
பாழடைந்து கிடந்த ஓர் அரசு மருத்துவமனையை, ஒரு
மருத்துவரின் முனைப்பு
சிறந்த மருத்துவமனையாக மாற்றியிருக்கிறது.
சிறந்த மருத்துவமனையாக மாற்றியிருக்கிறது.
நன்றி: விமரிசனம் வலைத்தளம்
Subscribe to:
Posts (Atom)