தற்போது நான் படித்துவரும்
சில இணைய தளங்களில் நான் ரசித்த பதிவுகளுக்கு பல பின்னூட்டங்கள் இட்டு இருக்கிறேன்.
அவைகளை இங்கு பதிந்தால் படிப்பவர்களும் ரசிக்கலாம்!!!
ஐந்து வருடங்கள் ஆட்சி செய்த அம்மா கடைசி நாள்வரை தமிழ்நாட்டில் மட்டும்
மதுவிலக்கு சாத்தியம் இல்லை என்று கூறிக்கொண்டுதான் இருந்தார். இப்போது தேர்தல்
ஜுரம் வந்துவிட்டதால் எங்கே பின்தங்கிவிடுவோமோ என்கின்ற பயத்தில் “படிப்படியாக” இறங்கிவிட்டார்
என்பதே உண்மை. உண்மையிலேயே மதுவிலக்கில் ஆர்வம் இருந்தால் அவர் கூறியுள்ள படிகளில்
ஒன்றிரண்டாவது தனது ஆட்சியின் கடைசிக் காலங்களில் எடுத்து இருக்கலாமே. அன்றே
கருணாநிதி மற்றும் ஏனையோருக்கு நாடகமாட ஒரு சந்தர்ப்பம் இல்லாது போயிருக்கும். திட்டம்
தயாரித்து குப்பையில் போடுவதுதான் அம்மாவின் திராணியா? நண்பர் காவிரிமைந்தன்
அவர்களே உங்களைப் போன்ற அறிவு ஜீவிகள் கூட இவ்வாறு சப்பைக்கட்டு கட்டி ஒரு சார்பாக
பதிவு இட்டால் யாரிடம் சென்று முறையிடுவது?
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பற்றிய அறிவிப்பு குறித்து “விமரிசனம்” என்ற தளத்தில்
வந்த பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்:
தி.மு.க. தேர்தல் அறிக்கை:
தேர்தல்
அறிக்கை பற்றி தளபதியின் பேட்டி
செய்தியாளர்: நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எப்படிப்பட்ட
தாக்கத்தை உருவாக்கி இருப்பதாக நினைக்கிறீர்கள் ?
மு.க.ஸ்டாலின்: ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்களால்
வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை தேர்தலின் “ஹீரோ” என்று சொல்வார்கள். இந்த தேர்தல் அறிக்கை “சூப்பர்
ஹீரோ” வாக இருக்கிறது.
செய்தியாளர்: தாங்கள் அளித்த வாக்குறுதிகளையே திமுகவும் வெளியிட்டு
இருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளாரே ?
மு.க.ஸ்டாலின்: அவர் எப்போதும் இப்படித்தான் தேவையற்ற வகையில்
எதையாவது சொல்வார். அதற்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க நான்
விரும்பவில்லை.
நன்றி: நக்கீரன்
ஆனாலும் தளபதி காமெடியாகத்தான் சமாளிக்கிறார்!!!
தி இந்து (தமிழ்) இணைய நாளிதழில் வந்த (12/04/2016) இரு பதிவுகளில்
கீழ்க்கண்டவாறு பிண்ணுட்டம் இட்டு இருக்கிறேன்.
ஜெயலலிதாவின்
குட்டிக்கதை:
ஒருவர்
தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வேறு ஒருவரை கொலை செய்துவிட்டார். சாவு ஏற்பட்டது.
ஏதோ சில காரணங்களினால் அந்த இடத்தைவிட்டு இவர்களால் ஓட முடியவில்லை. அதான்
கொலையாளியும், அவர் கூட்டாளிகளும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அப்போது, கொலை செய்யப்பட்டவரின் உற்றாரும், உறவினர்களும், நண்பர்களும் அங்கே ஓடி வந்தனர். அய்யோ
நண்பா நீ போய்விட்டாயா, அய்யோ மகனே நீ போய்விட்டாயா என்று மற்றவர்கள் கூக்குரலிட்டு
அழுகின்ற போது, இந்தக் கொலையாளியும், அவரது நண்பர்களும் சேர்ந்து அய்யோ நண்பா நீ போய்விட்டாயா என்று
கதறி, அழுது ஒப்பாரி வைத்தார்களாம். அது போல இருக்கிறது கருணாநிதி மதுவிலக்கைப்
பற்றிப் பேசுவது.
பொருத்தமற்ற கதை. "ஏதோ சில காரணங்களினால் அந்த இடத்தைவிட்டு
இவர்களால் ஓட முடியவில்லை" இவர்கள் மட்டும் என்ன செய்தார்கள்? பிணத்தை வைத்து
காசு பார்த்தார்களா? அவர்கள் கொன்றார்கள் இவர்கள் அதை வைத்து காசு பார்த்தார்கள்!!!!!
சரத்குமார்
கதை:
''ஒருமுறை மன்னரின் விரலில் காயம்பட்டதைப் பார்த்த தெனாலிராமன், 'எல்லாம் நன்மைக்கே' என்றார். கோபத்தில் அவரை சிறையில்
அடைத்தார் மன்னர். அதன்பின் வேட்டைக்கு சென்ற மன்னரை, காட்டுவாசிகள் தங்கள் தேவதைக்கு பலி
கொடுக்க முயன்றனர். அவரது விரலில் காயம் இருந்ததால், உடலில் குறை இருப்பதாக விடுவித்தனர்.
தெனாலிராமனை மன்னர் விடுதலை செய்தார். அப்போது அவர், 'நீங்கள் என்னை சிறையில் அடைக்காவிட்டால், காட்டுக்கு வந்திருப்பேன். உங்களுக்கு
பதில் என்னை பலி கொடுத்திருப்பார்கள்' என்றாராம். அதுபோல் நான் எடுக்கும்
முடிவு எல்லாம் நன்மைக்கே' என்றார்.
சரியான
கதையைத்தான் சொல்லி இருக்கிறார். தோற்கப்போவது உறுதி. அட்லீஸ்ட் அது அவருடனாவது
போகும் அல்லவா?
No comments:
Post a Comment