தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா!!!
எல்லோரும் எழுதுறாங்க, நம்மளும் எழுதினால்
என்ன என்ற ஆசை!! ஆசை யாரை விட்டது? ஆனால் ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம்
இருக்கு என்னவோ செய்ய!! சோம்பேரித்தனம் சும்மா விடுமா? பிளாக் ஆரம்பித்து பல ஆண்டுகள்
ஓடிவிட்டன!! ஒரு எழுத்துக் கூட எழுத முடியவில்லை. மண்டையில் மசாலா இருந்தால் தானே
எதுவும் வெளியே வரும். அப்படியானால் எப்படித்தான் எழுதி ஆசையைத் தீர்த்துக்கொள்ளுவது?
நாம் எழுதினால் யார் படிப்பார்கள்? மனதில் ஏகப்பட்ட கேள்விகள். ஆனாலும் எழுதியே தீருவது
என்று முடிவு எடுத்து விட்டேன். படிப்பவர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். மலரானாலும்
கல்லானாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டேன்!!!!
தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா!! நமக்கு
இதைவிட சரியான சந்தர்ப்பம் கிடைக்குமா? நாம் எவ்வளவு முட்டாளாக இருந்தாலும் நாம்
கூட என்ன கருத்து சொல்கிறோம் என்று எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கும்
பலபேர்கள் இருக்கும் நல்ல தருணம். எழுதத்துணிந்து விட்டேன். படிக்கும் பல இணைய
இதழ்களுக்கு ஏதாவது மடத்தனமாகப் பின்னுட்டம் இட்டுப்பார்த்தேன். பலர் அனுமதித்தார்கள்.
சிலர் ஒதுக்கிவிட்டார்கள். முடிவு : நமது இணைய பக்கத்திலேயே கருத்துசொல்வதே
சாலச்சிறந்தது என்ற எண்ணம் மலர்ந்தது. நல்ல நாள் பார்த்தேன். இன்று மிகவும் நல்ல
நாள். ஏப்ரல் ஒன்று. இதைவிட நல்ல நாள் கிடைப்பது அரிதினும் அரிது. உடனே எழுத
ஆரம்பித்து விட்டேன்.
முன்னுரையை எழுதிவிட்டேன். பின்னுரைகளுக்கு
மசாலா வேண்டிக் காத்திருக்கிறேன்.
10 comments:
யாா் இந்த சிக்மா? சிக்களை தீா்க்க வந்தவரோ entryயே பட்டாசாக உள்ளதே?
படிப்பவரை ஆண்டவன் காப்பாறறுவான் என நம்பிக்கையும், தைரியமும் கொடுப்பதால் படிக்க முடிவு பண்ணிவிட்டேன். ஆரம்பியுங்கள். ALL THE BEST SIGMA....
All the best Sigma... You start the show. we are waiting
நல்ல ஆரம்பம் வாழ்த்துக்கள்.
துரை எஸ்.ஜெயச்சந்திரன்.
We are waiting...
We are waiting...
Good
Good
Malar Thoovi Varaverkirome. Arambiyungal Annan.-Chandra
Post a Comment