Thursday, May 19, 2016

இளைய தலைமுறை

நமது இளைய தலைமுறையினரின் சமுதாய அறிவு, அக்கறை மற்றும் விழிப்புணர்வு பற்றி முந்தைய பதிவு ஒன்றில் எழுதியிருந்தேன். பார்க்கவும்:  http://sigmafashions.blogspot.in/2016/05/blog-post_17.html அதில் குறிப்பிட்ட வீடியோவை https://www.youtube.com/watch?v=yEXoD7YBYS0 என்ற சுட்டியில் காணலாம். அந்த பதிவில் என்னுடைய பார்வையை நிகழ்ச்சியாளரின் கேள்விகளுக்கு ஒரு பொறுப்புடன் பதிலளிக்கும் நாகரீகமோ, பொது அறிவோ அல்லது எளிய கேள்விகளுக்கே பதில் தெரியவில்லையே என்கின்ற வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் அலட்சியமாகவும் கேலி, கிண்டலாகவும் பதிலளிக்கும் பொறுப்பற்ற இளைய தலைமுறையின் போக்கு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த வருத்தத்தின் அர்த்தம் இன்றைய தேர்தல் முடிவுகளில் வெளியாகி இருக்கிறது. மாற்றத்தை இன்றைய தலைமுறையினர் உதாசீனப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் ஒன்று வாக்களிக்கவில்லை அல்லது மாற்றத்திற்கான வழிமுறைகளைப் புரிந்து கொள்ளவில்லை என்பது நிதரிசனம்!! நம் பெரியவர்களிடமிருந்து அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. சமூக வலைதளங்களையும் பொழுதுபோக்குக்காகவேயன்றி சமூக அறிவுக்காக பயன்படுத்தவில்லை. இந்நிலை மாறவேண்டும். பெற்றோரும் பெரியவர்களும் சமுக அறிவுக்கும் விழிப்புணர்வுக்கும் நேராக இளையதலைமுறையினரை வழிநடத்தவேண்டும். வெறும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது!!!!!!

No comments: